×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச பட்டா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறதைீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற, கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மண்டலம் வையாவூர் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Patta ,People's Grievance Meeting , Free Patta for the beneficiaries in People's Grievance Meeting
× RELATED பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்...