×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் சில்ர தூங்கிக்  கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், தூங்கிக்கொண்டிருந்த பழனிவேல் என்ற  பயணியிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ‘திருடன்... திருடன்... என கூச்சலிட்டுள்ளார். சக பயணிகள் அந்த 2 பேரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் பிடியில் இருந்து அவர்களை மீட்டு, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சூரியா (20), அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (26) என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2  செல்போன்களை பறிமுதல்  செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

செல்போன் திருடர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தபோது, அவர்கள் வெட்டியதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Coimbadu bus , 2 arrested for stealing cell phone from passenger at Koyambedu bus station
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க கோயம்பேடு பஸ்...