×

வில்லிவாக்கத்தில் வங்கி சுவற்றில் துளையிட்டு கொள்ளை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் நியு ஆவடி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கி சுவற்றில் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே பணப்பெட்டகம் வைத்திருந்த அறையில் சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹20 ஆயிரம்  மதிப்புள்ள 5, 10 ரூபாய் மற்றும் சில்லறை நாணயங்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் மேலாளர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் கடந்த சில நாட்களாக வங்கி புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.7 கோடி பணம் தப்பியது. வங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் நேற்று பணிக்கு வரவில்லை என்றும் அந்த வாலிபருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தனிப்படை அமைத்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.


Tags : Williwack , Bank wall robbery at Williwack
× RELATED வில்லிவாக்கத்தில் பரபரப்பு; வீட்டில்...