குமுளி: முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் குமுளி, தேக்கடியில் இருந்து அடித்துவரப்பட்ட செடி, கொடிகள் தேக்கடி தலைமதகில் தேங்கியுள்ளது. குப்பைகளால் நீர் வெளியேறும் வேகம் குறைந்ததால் அவற்றை அகற்றுவதற்காக நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.