சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய எடுத்த நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை உயிரிழந்துள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செப்.9க்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிடில் டான்ஜெட்கோ நிர்வாக இயக்குனர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் வனத்துறையினர் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.