×

சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி: மும்பை போலீஸ்

மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராவத்தை 8 நாள் விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 4 நாட்கள் விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சஞ்சய்  ராவத்தை மீண்டும் ஆக.4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை உத்தரவு விடுத்துள்ளது. நிலமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா மூத்த மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Sanjay Raut ,Mumbai Police , Sanjay Raut allowed to question for 4 days: Mumbai Police
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...