×

பெரம்பலூர் அருகே ஒரே சமயத்தில் 3 கன்று ஈன்ற பசுமாடு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வே ப்பந்தட்டை தாலுக்கா, அன் னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகமதுபட்டினம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வெ ள்ளையன்(62).அதே ஊரை ச் சேர்ந்த ஒருவரது வயல் ஒன்றை குத்தகைக்கு பேசி அதில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது சொந்த வருமானத்திற்காக கடந்த சில வருடங்களு க்கு முன்பு 2கன்றுக்குட்டிக ளை வாங்கி வளர்த்து வந் தார்.அதில் ஒரு கன்றுக்குட்டி பெரிதாகி ஏற்கனவே ஒரு கன்றுக்குட்டியை ஈன்றிரு ந்தது. அந்தக் கன்றுக்குட்டி வளர்ந்து சினைப்பசுவாக இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரே சமயத்தில் அந்தப் பசுமாடு கருப்பு நிற த்தில் அழகான 3கன்றுக் குட்டிகளை ஈன்றுள்ளது. மூன்றும் கிடேரி எனப்ப டும் பெண் கன்றுக் குட்டிக ளாகும். தாயும் 3 கன்றுகளும் தற்போது நலமாக உள்ளன. இதனால் வெள்ளையன் குடும்பத்தினர் கடவுள் தங்களுக்கு அளித்த பரிசாக நினைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். முகமது பட்டினத்தில் பசு மாடு ஒரே பிரசவத்தில் மூன்று கன்றுக் குட்டிகளை ஈன்ற தகவல் அன்னமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி களில் காற்றாகப் பரவி பர பரப்பையும் ஆச்சர்யத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. இத னை பக்கத்து ஊர்க்காரர்களும் தேடிவந்து பார்த்துச் செல்கின்றனர்.



Tags : Perambalur , 3 cows giving birth at the same time near Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி