×

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன...

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அதன்பின் அவை இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அந்த சமயத்தில் எதிர் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கி விட்டனர். மாநிலங்களவையில் முழக்கங்கள் எடுத்த உடனே எதிர்கட்சிகள் பலமுறை அவை தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தும் அதை ஏற்று கொள்ளாததால் உடனடியாக அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சிவசேனா, சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் விவாதம் தேவையென அதே கட்சியை சேர்ந்த பிரியங்கா சந்துருவேதி ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருக்கிறார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும், அது குறித்து பிற அலுவலகங்களை குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல ஆம் ஆத்மி கட்சி விலைவாசி உயர்வு குறித்து கோரிக்கை வைத்துள்ளார். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை எதிர் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதால் அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் இந்த சூழலே நிலவியது, எதிர் கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பின. அதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்றும் 2 அவைகளும் முடங்கி இருக்கின்றன. இன்று விலைவாசி குறித்து மக்களவையில் விவாதம் நடத்தலாம் என அரசு ஒப்புக்கொண்டு பட்டியலிட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வாரத்தில் இருந்து நாடாளுமன்ற அலுவலகங்களை கவனிக்க தொடங்கி இருக்கிறார். எனவே, இந்த விவாதத்தை நடத்தலாம் என அரசு ஒப்பு கொண்ட போதிலும் எதிர் கட்சிகள் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியுள்ளது.                                    


Tags : Houses of Parliament , Opposition, Amali, Parliament, Houses, Adjournment,
× RELATED 17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...