திருப்புவனம்: திருப்புவனத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 18 அடி நீளம், 280 கிலோ எடை கொண்ட ராட்சத அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அரிவாள் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. திருப்பாச்சேத்தியில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்புவனத்திற்கு இடம் மாறிவிட்டனர். இங்கு தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்புவனத்தைச் சேர்ந்த சதீஷ் நாகேந்திரன் பட்டறையில் 18 அடி நீளம், 280 கிலோ எடை கொண்ட ராட்சத அரிவாள் கோயிலில் காணிக்கை செலுத்துவதற்காக தயாரித்துள்ளனர். இந்த அரிவாளை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த அரிவாள் சிவகங்கை அருகே வயிரவன்பட்டி எரும்புகுடி பண்ணக்கருப்பண சாமி கோயில் வாசலில் நடப்படுகிறது.