×

ஆந்திராவில் சோகம் கடலில் குளித்த 6 மாணவர் பலி: ஒருவர் உயிருடன் மீட்பு

திருமலை: ஆந்திராவில் கடலில் குளிக்க சென்ற 6 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 15 மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அனகாப்பள்ளி சீதாபாலம் கடற்கரைக்கு சென்றனர். 7 மாணவர்கள் குளிக்க கடலில் இறங்கினர். மற்றவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். அப்போது, பெரிய அலை வந்து 7 பேரையும்  இழுத்துச் சென்றது. அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து சுரிஷெட்டி தேஜா என்ற மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பவன் (19) என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். கடற்படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை கடற்படையினர் மீண்டும் தேடினர். இதில், ஜெகதீஷ், கணேஷ், ஜஸ்வந்த், சதீஷ்குமார், சந்து ஆகிய 6 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். ஆ்நதிராவில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Andhra Pradesh , Tragedy in Andhra Pradesh: 6 students killed in sea bath: 1 rescued alive
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...