×

திருவாரூர் அருகே பஸ் நிறுத்தத்தில் அரிவாள் வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 4 இளைஞர்கள் கைது

நன்னிலம்: திருவாரூர் அருகே அரிவாள் வடிவ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதவன். இவருக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் விதமாக பேரளம் பஸ் நிறுத்தத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாள் வடிவத்தில் கேக் வெட்டினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பாக பேரளம் போலீசார் வழக்கு பதிந்து பொது இடத்தில், மக்களுக்கு இடையூறாக கேக் வெட்டியதாக அஜய் குமார் (27), மணிகண்டன் (19), விஷ்ணு (19), பிரசாத் (26) ஆகிய 4 பேரை கைது செய்னர். மாதவன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Tiruvarur , Birthday celebration for cutting sickle-shaped cake at bus stand near Tiruvarur: 4 youths arrested
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...