×

பெரம்பலூர் அருகே சென்னை பஸ் லாரி மீது மோதி டிரைவர், கண்டக்டர் பலி

பெரம்பலூர்: சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை, திருச்சி மாவட்டம் லால்குடி, பெருவளப்பூரை சேர்ந்த தெய்வேந்திரன் (40) ஓட்டினார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே அய்யப்பநாயக்கன்பேட்டையை சேர்ந்த முருகன்(56) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு  அருகே பஸ் சென்ற போது, முன்னால் சென்னையிலிருந்து இரும்பு குழாய்களை ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி, லாரியின் பின்பகுதியில் சொருகியது. டிரைவர் தெய்வேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகியோர் பலியாகினர். பஸ்சில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Chennai ,Perambalur , Chennai bus collides with lorry near Perambalur, driver, conductor killed
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...