ஜெய்ப்பூர்: அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் வயது வரம்பில், ராஜஸ்தான் அரசு 2 ஆண்டுகள் தளர்வு அளித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் நேற்று கூறுகையில், ‘‘கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இனி வரும் காலங்களில் நடத்தப்படும் அரசுப் பணி போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்சவரம்பில் 2 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்,’’ என்றார். முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சியில் பேசிய அசோக் கெலாட், ‘இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.