×

குஜராத்தில் போதை விற்பனை மாபியா கும்பலை பாதுகாப்பது யார்?.. ராகுல் கேள்வி

புதுடெல்லி: ‘குஜராத்தில் கள்ளச் சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்யும் மாபியாக்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?’ என்று ராகுல் கேட்டுள்ளார். குஜராத்தின் பொடாட், அகமதாபாத் மாவட்டங்களில் கடந்த 25ம் தேதி ரசாயனம் கலந்த கள்ளச் சாராயம் குடித்த 42 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வறட்சி மிகுந்த குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளன.

பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் வாழ்ந்த மண்ணில், கண்மூடித்தனமாக போதைப் பொருள்கள் விற்கப்படுவது கவலை தருகிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை விற்பனை செய்யும் இந்த மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு அளிக்கிறது?,’ என கேட்டுள்ளார்.

Tags : Gujarat ,Rahul , Who is protecting the drug mafia in Gujarat?..Rahul's question
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...