×

வீடுகளில் தேசிய கொடி: மேயர் வேண்டுகோள்

சென்னை: சென்னை மேயர் பிரியா வெளியிட்ட அறிக்கை: 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒன்றிய மற்றும் தமிழக அரசின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் 13, 14ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய 3 நாட்களும் மூவர்ண தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமை
யில் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்தது.

இதில், மண்டலக்குழு தலைவர்களிடம் அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக இயன்ற அளவிற்கு மூவர்ண தேசியக் கொடி ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.


Tags : Mayor , National Flag at Homes: Mayor's Appeal
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!