×

காந்தி, வல்லபாய் படேல் பிறந்த மண்ணில் போதைப்பொருள் வியாபாரம்!: மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?.. ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லி: போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி கொத்துக்கொத்தாக உயிரிழந்தனா். மேலும் 97 பேர் பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, பா்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளன. உயிரிழந்தவா்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், வறண்ட மாநிலமான குஜராத்தில், கள்ளச்சாராயம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டதாகவும், பில்லியன்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள்கள் அங்கிருந்து தொடர்ந்து கைப்பற்றப்படுவதாகவும் சுட்டிக்‍காட்டியுள்ளார். மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் பிறந்த மண்ணில், கண்மூடித்தனமாக போதை வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாகவும், இந்த மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன? என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Gandhi ,Vallabhai Patel ,Mabia ,Raquel Gandhi , Gandhi, Vallabhbhai, drugs, mafia, Rahul Gandhi
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...