தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.