×

மல்லசமுத்திரத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்  சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 3549 மூட்டை பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். இதில், சுரபி ரகம் ₹9311 முதல் ₹10776 வரையிலும், பிடி ரகம் ₹9422 முதல் ₹11150 வரையிலும், கொட்டு பருத்தி ₹6299 முதல் ₹7665 வரையிலும் ஏலம் போனது.

இதன்மூலம் ₹1 கோடியே 29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 3ம் தேதி(புதன்கிழமை) நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில், பருத்தி ஏலம் நடைறெ்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 470   மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹10199  முதல் ₹11202 வரை விலை போனது. சுரபி ரகம் ₹10499 முதல் ₹11352  வரை விற்பனையானது. இதன்மூலம் ₹17.21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Mallasamudra , Mallasamuthram: Cotton was sold for ₹1.29 crore in the auction held at Mallasamuthram. Trichengode Agriculture
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்