×

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,364 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது, இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 16-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,364 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக இருந்த நிலையில் தற்போது 120 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 19,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags : Mattur Dam , Increase in water flow to Mettur Dam due to continuous heavy rain!
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...