×

பெரம்பலுர் அருகே பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு: கல்குவாரி மூடப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலுர்: பெரம்பலுர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல்குவாரியில் பொக்லைன் மூலம் பாறைகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பாறை சரிந்து விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக மருவத்தூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாறை சரிந்து 2 தொழிலாளர் பலியான கவுள்பாளையம் கல்குவாரி மூடப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். கனிமவள அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கல்குவாரியை ஆய்வு செய்த பின் ஆட்சியர் பேட்டியளித்துள்ளார்.


Tags : Perambalur ,Kalguari , 2 laborers killed in rock fall near Perambalur: Perambalur Collector announces closure of Kalquary
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி