×

பிரதான குழாயில் வால்வு பொருத்தும் பணி வேப்பேரி, பெரம்பூரில் 2 நாள் குடிநீர் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் பிரதான குழாயில் வால்வு பொருத்தும் பணி நடைபெற உள்ளதால், வேப்பேரி, பெரம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மி.மீ விட்டமுள்ள உந்து பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி நாளை (30ம் தேதி) காலை 8 மணி முதல் 31ம் தேதி மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.  இதனால் பகுதி-5க்கு உட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, பகுதி-6க்கு உட்பட்ட பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, பகுதி-8க்கு உட்பட்ட கெல்லீஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் பகுதி-9க்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண் (044-45674567)ல் தொடர்பு கொள்ளலாம். மேலும், பகுதி-5க்குட்பட்டவர்கள் 8144930905 என்ற எண்ணிலும், பகுதி-6க்குட்பட்டவர்கள் 8144930906 என்ற எண்ணிலும், பகுதி-8க்குட்பட்டவர்கள் 8144930908 என்ற எண்ணிலும், பகுதி-9க்குட்பட்டவர்கள் 8144930909 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Vepperi ,Perampur , Drinking Water Stoppage, Water Board Notice, Maintenance Work
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...