×

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் ரூ.30.90 லட்சம் உண்டியல் வசூல்

பாபநாசம்: கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தன. அதில் ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் பணம் வசூலானது.ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக விளங்குவது சுவாமிமலை சுவாமிநாத சாமி கோயில். இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. கோயிலில் உள்ள 13 உண்டியல்களில் இருந்து பெறப்பட்ட தொகைகளை கோயில் திருமண மண்டப வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது.

கடந்த மாதம் ஜூன் 28ம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் இந்த மாதம் 26ம் தேதி அன்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 13 உண்டியலில் சேர்த்து ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்து 674 ரொக்கமும், 72 கிராம் தங்கமும், 976 கிராம் வெள்ளியும், 109 வெளிநாட்டு பணங்களும் சேகரிக்கப்பட்டு இவை அனைத்தும் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.இந்த கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணியில் கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, கோயில் துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள், தாராசுரம் கே.எஸ்.கே கல்லூரி மாணவிகள் உள்பட பலர் ஈடுபட்டனர்.

Tags : Swaramimalai Murugan Temple ,Kumbakonam , Collection of Rs.30.90 Lakhs in Swamimalai Murugan Temple near Kumbakonam
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...