×

நாகை அருகே பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நாகை: வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. விடுதியில் காலை உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Nagai , More than 50 female students vomited and fainted in a school hostel near Nagai: the female students were admitted to hospital
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு