×

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலை விழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டித் தொடரில் சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மாலை 5 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் அதில் பங்கேற்க இருந்த கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 900 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Corona pandemic ,Chess Olympiad inaugural ceremony art show , 4 people who participated in the art program of the opening ceremony of the Chess Olympiad were confirmed to be infected with Corona!
× RELATED கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான...