×

ஈரோட்டில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது

ஈரோடு: தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் திலக் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ம் தேதி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு (ஐபி) போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலிமை கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் வசிக்கும் ஆசிப் (28), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த யாசின் (31) ஆகிய 2 பேரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களில் ஆசிப் உபா சட்டத்தின் கீழ் ஈரோடு வடக்கு போலீசாரால் நேற்று இரவு கைது  செய்யப்பட்டார். யாசினிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : Erode, ,NIA , NIA officers probe, terrorist, youth arrested
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!