பெர்லின்: ஜெர்மனியில் செயல்படும் லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு கையாளுதல், தொழில்நுட்பம் மற்றும் கார்கோ பிரிவை சேர்ந்த 20,000 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிராங்க்பர்ட், முனிச், பெர்லின் வழித்தடத்தில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 47 இணைப்பு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் 1.34 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.