பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ இளைஞரணி பிரமுகரை கேரளாவை சேர்ந்த கும்பல் படுகொலை செய்ததால் பதற்றம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலம், மங்களூரு மாவட்டம், சூள்யா தாலுகா, பெல்லாரே கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு (32), மாவட்ட பாஜ இளைஞரணி பிரமுகரான அவர், கிராமத்தில் சொந்தமாக இறைச்சிக் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடும் நேரத்தில் பைக்கில் வந்த 4 பேர் கும்பல் பிரவீனை வெட்டி கொலை செய்தது. இந்து அமைப்புகளுடன் இணைந்திருந்த பிரவீன், சமூக சேவையில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் படுகொலை செய் யப்பட்ட தகவல் காட்டு தீப்போல் பரவியதால், பாஜ, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை பிரவீன் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டபோது, தொண்டர்கள் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில், 10க்கு ம் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. கேரளாவில் இருந்த கும்பல், பிரவீனை கொன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், பெரும் பதற்றம் நிலவுகிறது.