சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24ம் தேதி மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் புறங்கனி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (வயது 21), விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது பெற்றோருக்கும் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.