×

டெல்லி, உ.பி.யில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி

புதுடெல்லி: நாட்டில் இதுவரை 4பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கேரளாவை சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி காசியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.  மேலும் உடலின் பல பகுதிகளில் தடிப்புகள் இருந்துள்ளது.

இதனால் அவர் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெளிநாடு சென்று திரும்பியதாக தெரியவந்துள்ளது. இதேபோல்,  உத்தர் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை அறிகுறி கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.


Tags : Delhi, UP , Monkey Measles Symptoms, Hospital, Health Department
× RELATED அதானியின் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம்...