×

திசையன்விளை அருகே 10க்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியல்களை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை-சிசிடிவிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

திசையன்விளை : திசையன்விளை அருகே 10ற்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியல்களை உடைத்து சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
 திசையன்விளையை சுற்றியுள்ள நவ்வலடி, காரிகோவில், மரக்காட்டுவிளை, கரைச்சுத்துப்புதூர் உட்பட 10ற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோயில்களில் நேற்று முன்தினம் இரவில் இரு மர்மநபர்கள் உண்டியல்களை உடைத்து சுமார் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

அத்துடன் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஊராட்சிகளுக்கு சொந்தமான டிராக்டர்களில் பேட்டரிகளையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அனைத்து கோயில் நிர்வாகிகளும் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். வழக்கை பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களின் உருவம் பதிந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் பல கோயில்களிலும் திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநில இளைஞர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vektionvilai , Vekyanvilai: More than 10 temples near Vekyanvilai were broken into by miscreants and more than Rs.2 lakhs.
× RELATED புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை