×

தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக மேற்கு வங்க வாலிபர் சேலத்தில் அதிரடி கைது

சேலம்: கர்நாடக மாநிலம் திலக் நகர் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவருடன் மேற்குவங்கத்தை சேர்ந்த அப்துல் அலிம் முல்லா (20) தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் சேலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்றுமுன்தினம் கர்நாடக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சேலம் வந்தனர். சேலம் கிச்சிப்பாளையம் குட்டைக்காட்டில் உள்ள கார்மென்ட்சுக்கு சென்றனர். அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தவர்தான்  அப்துல் அலிம் முல்லா. இவரை கைது செய்த போலீசார் பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தாரா அல்லது போதை பொருள் கடத்தலில் தொடர்பு உள்ளவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : West ,Salem , West Bengal youth arrested in Salem for having links with terrorist organization
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...