பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஜனவரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், தற்போது 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.