×

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜீத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்கள் பெரிய அளவில் தமிழக அரசால் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர்.

அந்த வரிசையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜீத் ஆகியோருக்கு ஆல் இந்தியா செஸ் அசோசியேஷன் மற்றும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Rajinikanth ,Kamal ,Vijay ,Ajith ,Chess Olympiad , Actors Rajinikanth, Kamal, Vijay, Ajith invited as special invitees for Chess Olympiad
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...