டெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி குறித்து விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. மக்களவையில் திமுக குழு துணைத்தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கினார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.