சென்னை பூந்தமல்லி அருகே திருத்தணியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையை கடக்க முயன்ற சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. சேதமடைந்த வேன் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதி சாய்ந்தது. தனியார் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.