சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் மீது தொடர் புகார் வருவதையொட்டி, நிர்வாகத்தின் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆகஸ்ட் 2வது வாரம் வரை நடராஜர் கோயில் நிர்வாகம் அவகாசம் கேட்டுள்ளது என்றார்.