புதுடெல்லி: ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடந்த சனிக்கிழமை உடல் சோர்வு, லேசான காய்ச்சல் என கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை எடுத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.