×

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு: மீண்டும் 38 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கத்துக்கான இறக்குமதி வரி விதிப்பை மத்திய அரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஒரு நிலையாக இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.400 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,440க்கு விற்கப்பட்டது. 23ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,696க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,568க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.528 உயர்ந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,720க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,760க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.38 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

Tags : Savaran , Gold prices continue to climb Rs 720 per Savaran: Closer to 38k again
× RELATED தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று...