×

கடலூர் அருகே கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து பலி: புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு நெய்வேலி அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால்,  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவேஉயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, விமல்ராஜின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கபடி விளையாட்டின் போது விமல்ராஜ் மயங்கி விழுந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags : Cuddalore , Cuddalore, Kabaddi, Youth, Bali, Police, Investigation
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!