சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் தேவை குறைவால் 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் மேற்கொண்டு வந்த 1200 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.