×

ஒத்திகை செஸ் போட்டி ஒரே நேரத்தில் 1,414 செஸ் வீரர்கள் பங்கேற்று சாதனை: அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தனர்

சென்னை: செஸ் ஒத்திகை போட்டியில், ஒரே நேரத்தில் 1,414 செஸ் வீரர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தனர். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை மாமல்லபுரத்தில் உள்ள பாயிண்ட்ஸ் - செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். இதற்காக, பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இரு அரங்குகளில் 707 செஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், நோபல் சாதனை படைப்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கனை 1,414 பேர் பங்கேற்க கூடிய ஒத்திகை செஸ் போட்டியானது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியை, ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒத்திகை செஸ் போட்டியை நேற்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று, காலை 10 மணிக்கு தொடங்கிய ஒத்திகை போட்டி இரவு 9 மணி வரை தொடர்ந்து 11 மணிநேரம் நடந்தது. நேற்று, மதியம்  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உயநிதி ஸ்டாலின் நேரில் வந்து போட்டியை கண்டுகளித்து செஸ் விளையாடினார்.  தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக, 1414 வீரர்கள் பங்கேற்க கூடிய, 707 செஸ் போர்டுகளில் விளையாடும் போட்டியை நேரடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக, முதல்வர் நான்கு ஆண்டுகளில் செய்ய வேண்டிய அனைத்து பணிகளை 4 மாதங்களில் முடித்து, போட்டி நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே 100% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஜூலை, 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்தியாவில், உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில், உள்ள அனைத்து குக் கிராமங்களுக்கும் இந்த செஸ் போட்டியை முதல்வர் கொண்டு சேர்த்துள்ளார். தமிழக, முதல்வர் மு.க.ஸ்டாலினும் செஸ் போட்டியை அருமையாக விளையாடக் கூடியவர். பிரதமர் மோடி ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடர் வரும் 27ம் தேதி மாமல்லபுரம் வர உள்ளது. அன்று, மாலையே சென்னை மெரினாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த ஒலிம்பிக் சுடர் சங்கமிக்க உள்ளது.  போட்டி, நடைபெறும் இடம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

*தலைமை செயலாளர் ஆய்வு
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் போர் பாயிண்ட் - செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற்று வரும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள், நோபல் சாதனை படைக்க ஒரே நேரத்தில் 1414 வீரர், வீராங்கனைகள் அமர்ந்து விளையாடிய செஸ் போட்டி ஆகியவற்றை தலைமை செயலாளர் வெ. இறையன்பு நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Ministers ,Meiyanathan ,Th.Mo. ,Anbarasan , Rehearsal chess match 1,414 chess players simultaneously participated record: Ministers Meiyanathan, Th.Mo. Anbarasan started it
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...