×

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

சென்னை: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், கணேஷ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற உள்வட்ட சாலையில் வீனஸ் நகர் பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்றும் நிலையம் ரூ.96 லட்சம் மதிப்பில், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததில், இதுவரை 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பணிகள் 15.08.2022க்குள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் டெம்பிள் பள்ளி அருகில், மழைநீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்று நிலையம் அமைக்க இடையூறாக உள்ள மின் தளவாடங்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் மாற்றியமைத்த பின்னர் பணி மேற்கொள்ளப்பட்டு, இப்பணி 31.10.2022க்குள் திட்டமிடப்பட்டுள்ளது.

கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயினை சென்றடையும் வகையில், உள்வட்ட சாலையின்  வலதுபுறத்தில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொளத்தூர் உபரி நீர் இரட்டை ஏரி வழியாக தொலைதூரம் சென்று தணிக்காசலம் கால்வாயினை சென்றடைகிறது. இப்பகுதியில் அமைக்கப்படவுள்ள பெரிய கால்வாயினால், கொளத்தூர் உபரி நீர் நேரடியாக தணிகாச்சலம் கால்வாயினை அடையும்.  இதனால் நீர்வழி பாதையின் நீளம் குறையும். இப்பணி 31.10.2022க்குள் முடிக்கப்படும்.

பெரிய மேற்கத்திய சாலையில், வேனல்ஸ் சாலை சந்திபில் தினத்தந்தி அலுவலகம் எதிரில் தேங்கும் மழை நீர் கூவம் ஆற்றினை சென்றடையும் வகையில், பெரிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் ஒரு சிறுபாலம் அமைக்கும் பணியும் ரூ.2.55 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 85 சதவீதம் முடிவுற்றுள்ளன.  மீதமுள்ள பணிகள் 31.07.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சாலையில் காவல் ஆணையகரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் 5 சிறுபாலப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3 சிறுபாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.   மீதமுள்ள 2 சிறுபாலப் பணிகள் 31.08.2022க்குள் முடிக்கப்படும்.

இதனை தொடர்ந்து, வால் டாக்ஸ் சாலையில் கி.மீ. 0/7 முதல் 3/0 வரை (சென்ட்ரல் இரயில் நிலையம் முதல் பெத்தநாயக்கன் சாலை வரை) 2.3 கி.மீ. சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், 8 சிறுபாலங்கள் அமைக்கும் பணியும் ரூ.31.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும்,  4600 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் பணியில், இதுவரை 3150 மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளதையும்,  மொத்தமுள்ள 8 சிறுபாலங்களில் 3 சிறுபாலப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 5 சிறுபாலப் பணிகளை மேற்கொள்ள தேவையான முன்வார்கப்பட்ட பாலப் பெட்டிகள் சிறுபாலம் அமைக்க   தயார் நிலையில் உள்ளன என மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

மேலும், இப்பணிக்கு இடையூறாக குடிநீர், கழிவுநீர் குழாய்களை மாற்றியமைக்க குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு (CMWSSB) ரூ.4.54 கோடி செலுத்தப்பட்டு குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்பெட்டிகள் மற்றும் மின் மாற்றிகள் மாற்றியமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) ரூ.54 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மழைக்காலத்திற்கு முன்னரே பணிகள் அனைத்தும் முடிக்க தொடர்ந்து பிற துறை சம்மந்தப்பட்ட, மின் துறை, இரயிவே துறை, சென்னை பெருநகர மாநாகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது, சென்னை பெருநகர ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா தலைமைப் பொறியாளர் திரு.சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் திரு.செந்தில், கோட்டப் பொறியாளர் திரு.சரவணசெல்வம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Highway Department ,Minister A. Etb Velu ,Minister ,B. K. Segarbabu , Minister AV Velu, Minister PK Shekharbabu reviewed the permanent flood prevention works being carried out by the Highways Department.
× RELATED ஜோலார்பேட்டை அருகே குடியான...