பழநி :பழநியில் ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகிக்க, செயலாளர் பச்சமுத்து வரவேற்றார். கவுரவ தலைவர் ஹரிஹரமுத்து, கவுரவ செயலாளர் பெருமாள்நாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரயில் நிலையங்களை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திண்டுக்கல்- திருச்சி வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திருச்சி- தஞ்சாவூர்- தாம்பரம் வழியாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பானையம்- பழநி வழித்தடத்தில் ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்- பழநி- ராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும். கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் சாதாரண ரயில் இயக்க வேண்டும். பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும். புதுதாராபுரம் சாலையில் ரயில் தடத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.