×

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: 800 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 20ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்களையும், படகையும் உடனடியாக மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.



Tags : Rameswaram , Rameswaram fishermen strike to free Sri Lankan jailed fishermen: 800 boats docked
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...