×

ஒரே மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ள தாய், மகள்

திருமங்கலம்: திருமங்கலத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே மையத்தில்  இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத உள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம்,  என்ஜிஓ நகரை சேர்ந்தவர் ரவி. ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  மனைவி வளர்மதி (47). பிஏ தமிழ் முடித்துள்ளார். இவரது மகள் சத்யபிரியா. நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வை சத்யபிரியா எழுத முடிவு செய்தார். அதே நேரத்தில் தனது தாயும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வேண்டுமென மகள் சத்யபிரியா வற்புறுத்தினார். இதையடுத்து வளர்மதியும் தேர்வுக்கு விண்ணப்பித்தார். தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையமாக கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று தேர்வு எழுதுகின்றனர்.

Tags : DNBSC , Mother and daughter appearing for TNPSC exam at the same centre
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு