×

அரசு திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை; ஆக.8 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வரும் ஆக.8ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2022-23ம் ஆண்டுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாணவர்கள் இளங்கலை ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ஆகிய பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.

தற்போது, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்பெற்ற நிலையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஆக.5ம் தேதி வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆக.12ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Film College , Admission to Government Film College; Extension of time to apply till August 8
× RELATED அரசு திரைப்பட கல்லூரியில் படிக்க...