×

குமுளி அருகே காரில் கடத்திய 30லி மதுபானத்துடன் இருவர் கைது-கேரள கலால் பிரிவு போலீசார் நடவடிக்கை

கூடலூர் : குமுளி அருகே அனுமதியின்றி விற்பனைக்காக காரில் கடத்தப்பட்ட 30 லிட்டர் மதுபானத்துடன் இருவரை கேரள கலால் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வண்டிப்பெரியார் கலால் துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில், போலீசார் ராஜ்குமார், ரவி, சேவியர், பிரமோத் குமார், ஷிபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் குமுளி அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் அனுமதியின்றி 30 லிட்டர் மதுபானம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வண்டன்மேடு மாலி பகுதியைச்சேர்ந்த பிரபு (35), சிவனேசன் (32) என்பதும், மதுபாட்டில்களை வண்டன்மேடு பகுதியில் விற்பனைக்காக செய்வதற்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Kumuli ,-Kerala ,Excise Division , Kudalur: Two arrested with 30 liters of liquor smuggled in a car for sale without permission near Kumuli in Kerala
× RELATED குமுளியில் குடியிருப்பு பகுதியில்...