சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கை சிவகாஞ்சி போலீசுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்த நிலையில் சிவகாஞ்சி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. 4 ஆண்டுகளாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு எந்த விசாரணையையும் மேற்கொள்ளாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.