×

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச்சடங்கு தொடங்கியது!: மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தந்தை உருக்கம்..!!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்கள், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியநெசலூர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மயானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமதியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர்அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மயானத்திற்கு ஏராளமான பெண்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகளை தந்தை ராமலிங்கம் செய்து வருகிறார். சகோதரர் சந்தோஷ் குமார் உடன் உள்ளார். முன்னதாக மாணவியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார்.

Tags : Srimati , School student Smt., body, cremation
× RELATED கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி...