×

ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் மியாவாக்கி காடு வளர்ப்பு: கலெக்டர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், பசுமை வளாகம் எனும் முயற்சியில் அடர்வனம் எனும் மியாவாக்கி காடுகள் வளர்ப்புதிட்ட துவக்க நிகழ்ச்சி நேற்று  முன்தினம் ஆவடி சிஆர்பிஎப் காவலர் பயிற்சி அதிகாரி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று, அரசமரம் நட்டு மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த அடர்வன மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின்படி, இங்குள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரச மரம், நாவல் மரம், புங்கை மரம், இலுப்பை உள்பட சுமார் 52 வகையான 1500 மரங்கள் ஒரேசமயத்தில் நடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சொட்டுநீர் பாசன முறையில் வளர்க்கப்பட உள்ளன என சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சிஆர்பிஎப் காவலர் பயிற்சி மைய முதல்வர் கேவல்சிங், துணை கமாண்டன்ட்கள் சந்திரசேகர், சரவணா, சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Miyawaki ,Avadi CRPF , Miyawaki afforestation at Avadi CRPF compound: Collector inaugurated
× RELATED ஆவடி சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு...